​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடலூர் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு... சுமார் 30 பேர் படுகாயம்

Published : Aug 21, 2023 6:04 PM

வடலூர் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு... சுமார் 30 பேர் படுகாயம்

Aug 21, 2023 6:04 PM

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, குறிஞ்சிப்பாடி அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, எதிரே வந்த கார் மீது மோதி நிலைதடுமாறிய பேருந்து, கட்டுப்பாடின்றி சென்று இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த 5 பேரில் ஒருவரும், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் மற்றும் பேருந்தில் பயணித்த சுமார் 30 பேர் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.