​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரியாணி பார்சல் வாங்குவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு... இளைஞர் படுகொலை

Published : Aug 21, 2023 4:36 PM

பிரியாணி பார்சல் வாங்குவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு... இளைஞர் படுகொலை

Aug 21, 2023 4:36 PM

சென்னையில், பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் 22 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அம்பத்தூர் அருகிலுள்ள மண்ணூர்பேட்டை டாஸ்மாக்கில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் என்ற தனியார் நிறுவன ஊழியர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு, அருகிலுள்ள பீஃப் பிரியாணி கடையில் உணவு ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், டாஸ்மாக்கில் மது அருந்திய 4 பேர் கொண்ட மற்றொரு கும்பலும் பிரியாணி கடையில் ஆர்டர் செய்ததாக தெரிகிறது.

பாலசந்தர் ஆர்டர் செய்த உணவு முதலில் வழங்கப்பட்டதால் கடை ஊழியர்களிடம் 4 பேர் கும்பல் தகராறு செய்ததாகவும், இதனை பாலசந்தர் தட்டிக் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில், பாலசந்தர் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் எதிர்தரப்பினரை முதலில் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலசந்தரை சரமாரியாக தாக்கியதோடு கத்தி கூச்சலிட்டுக் கொண்டே சாலையில் சென்ற ஒரு காரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் பாலசந்தர் அதே இடத்தில் உயிரிழந்ததாக தெரிவித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் சி.சி.டி.வி பதிவு அடிப்படையில், முகப்பேரைச் சேர்ந்த சங்கர் மற்றும் பெரம்பூர் அஜீத், அயனாவரம் நெப்போலியன், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.