​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே, மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நீடிப்பு

Published : Aug 21, 2023 7:14 AM

எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே, மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நீடிப்பு

Aug 21, 2023 7:14 AM

எல்லை விவகாரம் தொடர்பாக, இந்தியா-சீனா இடையே, மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நீடிக்கிறது.

இருநாடுகளிடையே, மாரத்தான் போல் நீண்டு கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையில், நீண்ட காலமாக இழுபறியில் உள்ள பிரச்சினைகள், குறிப்பாக டெம்சோக் மற்றும் டெப்சங் சமவெளிப் பிரதேசங்களில் படைக்குறைப்பு செய்ய இந்தியா வலியுறுத்தி வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்போது மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நீடிக்கிறது. 3 ஆண்டுகளாக நீடிக்கும் சிக்கல்களைத் தீர்க்க இருதரப்பிலும் இதுவரை 19 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.