​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீரில் கிராமப் பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.

Published : Aug 21, 2023 6:58 AM

காஷ்மீரில் கிராமப் பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.

Aug 21, 2023 6:58 AM

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரோடு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம் லாரோ பாரிஜாம் கிராமப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் மூன்றாவது தீவிரவாதி வயல்காட்டிலும் மக்கள் குடியிருக்கும் பகுதியிலும் பதுங்கி தப்பிச் செல்ல முயற்சிப்பதால் தொடர்ந்து அவனை பாதுகாப்பு படையினர் விரட்டி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்