​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சாரம் தாக்கிய கணவனை காப்பாற்ற சென்ற மனைவி உயிரிழப்பு.. புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீர் ஊற்றிய போது விபரீதம்.. !!

Published : Aug 20, 2023 4:01 PM

மின்சாரம் தாக்கிய கணவனை காப்பாற்ற சென்ற மனைவி உயிரிழப்பு.. புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீர் ஊற்றிய போது விபரீதம்.. !!

Aug 20, 2023 4:01 PM

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, மின்சாரம் தாக்கிய கணவனை காப்பாற்ற சென்ற மனைவி உயிரிழந்தார்.

மீனாட்சிபுரத்தில் வாகன ஓட்டுநர் பாண்டி என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு கான்கிரீட் மேற்கூரை அமைத்து ஒரு மின்விளக்கு மட்டும் பொருத்தியுள்ளார்.

மேற்கூரையை தண்ணீர் ஊற்றி நனைத்துக் கொண்டிருந்த போது சேதமடைந்த மின்வயர் வழியாக கசிந்த மின்சாரம் பாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, உடனிருந்த அவரது மனைவி உதயசூரியா கணவனை அங்கிருந்து தள்ளி விட்டபோது, மின்சாரம் பாய்ந்துக் கொண்டிருந்த தண்ணீரில் கால் வைத்ததாக கூறப்படுகிறது.

இதில், மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், உதயசூரியா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.