​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிரோன்கள், பாராகிளைடர்கள், நீராவி பலூன்கள் பறக்க செப்டம்பர் 16 வரை தடை விதித்து போலீசார் உத்தரவு

Published : Aug 19, 2023 8:30 AM

டிரோன்கள், பாராகிளைடர்கள், நீராவி பலூன்கள் பறக்க செப்டம்பர் 16 வரை தடை விதித்து போலீசார் உத்தரவு

Aug 19, 2023 8:30 AM

மும்பையில் செப்டம்பர் 16ந்தேதி வரை டிரோன்கள், கிளைடர் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை போலீசார் வெளியிட்ட உத்தரவில், நகரில் டிரோன்கள், ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் மைக்ரோ லைட் விமானங்கள், பாராகிளைடர்கள், பாரா மோட்டார்கள், நீராவி பலூன்கள் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.விவிஐபிக்கள் குறிவைத்துத் தாக்கப்படலாம் அல்லது பொதுமக்களின் உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தலாம் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.