​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என இம்ரான் மனைவி பஞ்சாப் உள்துறைச் செயலாளருக்கு கடிதம்

Published : Aug 19, 2023 8:19 AM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என இம்ரான் மனைவி பஞ்சாப் உள்துறைச் செயலாளருக்கு கடிதம்

Aug 19, 2023 8:19 AM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என அவரது மனைவி புஷ்ரா பீபி அச்சம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இம்ரான்கானை எந்த நியாயமும் இன்றி சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது கணவர் மீது கடந்த காலங்களில் இரண்டு படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ள புஷ்ரா பீபி, அட்டாக் சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்படுவார் என அச்சப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.