​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த முடிவு..!

Published : Aug 19, 2023 6:23 AM

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த முடிவு..!

Aug 19, 2023 6:23 AM

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ள 15வது பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 22 முதல் 24ம் தேதி வரை நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

அம்மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இருநாட்டு ராணுவத் தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. லடாக்கில் சீனப்படைகளைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்திய ராணுவத்தினர் வலியுறுத்தினர்.