​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொந்தங்களுக்குள் குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சையெடுத்த கும்பல் 4 குழந்தைகளை மீட்டு மாவட்ட நிர்வாகம் விசாரணை

Published : Aug 17, 2023 3:30 PM

சொந்தங்களுக்குள் குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சையெடுத்த கும்பல் 4 குழந்தைகளை மீட்டு மாவட்ட நிர்வாகம் விசாரணை

Aug 17, 2023 3:30 PM

திருச்சியில், குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்து வருபவர்களிடம் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபம் பகுதியில் குழந்தைகளை வைத்து சிலர் பிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்ட புகாரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் குழந்தைகள் நலகுழுமத்தினர் விசாரணை நடத்தி 4 குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, குழந்தைகள் நல அலுவலர் ராகுல் காந்தி கூறுகையில், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது தவறு என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, அவர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கும் ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறினார்.