​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனடாவின் 'எல்லோநைப்' நகரை நெருங்கியது காட்டுத்தீ... 20,000 பேர் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு

Published : Aug 17, 2023 1:39 PM

கனடாவின் 'எல்லோநைப்' நகரை நெருங்கியது காட்டுத்தீ... 20,000 பேர் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு

Aug 17, 2023 1:39 PM

கனடாவின் யெல்லோ நைஃப் நகரை காட்டுத்தீ நெருங்கியதால் அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரும் வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

அல்பெர்டா மாகாணத்தில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

யெல்லோ நைப் நகரை காட்டுத்தீ நெருங்கியதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, விமானங்கள் மூலம் மக்களை ராணுவ வீரர்கள் வெளியேற்றிவருகின்றனர்.

மலையேற்றத்தின்போது காட்டுத்திக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.