​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க 53 பேர் கொண்ட குழுவை அமைத்தது சிபிஐ

Published : Aug 17, 2023 6:53 AM

மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க 53 பேர் கொண்ட குழுவை அமைத்தது சிபிஐ

Aug 17, 2023 6:53 AM

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களை விசாரித்து வரும் சிபிஐ, பெண் அதிகாரிகள் உட்பட 53 பேர் கொண்ட புதிய குழுவை அமைத்துள்ளது.

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவற்றை விசாரிக்கும்  சிபிஐ குழுவில் மூன்று டிஐஜி மட்டத்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இருவர் பெண் அதிகாரிகள்.

மணிப்பூர் வழக்குகள் விசாரணையைக் கண்காணிக்க 3 உயர்நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.