​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பற்றி விசாரணை...

Published : Aug 17, 2023 6:44 AM

4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பற்றி விசாரணை...

Aug 17, 2023 6:44 AM

மும்பை-ஜெய்ப்பூர் ரயிலில் 4 பயணிகளை சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் சிங் சவுத்திரி மேலும் பலரைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் பயணிகள் கூச்சலிட்டதால் பல பேருடைய உயிர் தப்பியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரயிலில் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கா அணிந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்டிய போது சகபயணிகள் கூச்சல் எழுப்பியதால் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கித் தோட்டாக்கள் தீர்ந்து விட்டதாக எல்லோரும் நினைத்த நேரத்தில் ரயிலை விட்டுஇறங்கும் முன்பு சேத்தன் மேலும் சில ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டபடி சென்றதாகவும் அதிர்ச்சியோடு வாக்குமூலம் அளித்துள்ளனர்.