​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் விவசாயி முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 சவரன் நகை பறிப்பு.. முகவரி கேட்பது போல நடித்து கைவரிசை..!

Published : Aug 16, 2023 5:35 PM

பெண் விவசாயி முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 சவரன் நகை பறிப்பு.. முகவரி கேட்பது போல நடித்து கைவரிசை..!

Aug 16, 2023 5:35 PM

கடலூர் மாவட்டத்தில் பெண் விவசாயியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 சவரன் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது.

கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான கொளஞ்சி என்பவர் வயலுக்குச் சென்று விட்டு பில்லூர் சாலை வழியாக வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து முகத்தில் திடீரென மிளகாய் பொடியை தூவியதாக கூறப்படுகிறது. பின்னர் தாலிச் செயினை பறித்துக் கொண்டு அப்பெண்ணை கீழே தள்ளி விட்டு அவர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.