​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிம்லாவில் கனமழையால் நிலச்சரிவுகள் -150 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

Published : Aug 16, 2023 6:25 AM



சிம்லாவில் கனமழையால் நிலச்சரிவுகள் -150 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!

Aug 16, 2023 6:25 AM

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக 60 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சுமார் 150 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று சிம்லாவில் கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீடு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள பன்கே பிகாரி கோவில் அருகில் ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.