​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூரில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து, பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதி

Published : Aug 15, 2023 7:57 PM

திருவாரூரில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து, பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதி

Aug 15, 2023 7:57 PM

திருவாரூரில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து, பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

அரசு உதவி பெறும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளில், கடந்த ஒரு வாரத்தில் டைபாய்டு பாதித்த 10 மாணவிகள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

தற்போது மேலும் 4 மாணவிகளுக்கு டைபாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து கூறிய பள்ளி செயலாளர் பள்ளிக்கு வரக்கூடிய நகராட்சி குடிநீரையும் துண்டித்து விட்டு தற்போது நிலத்தடி நீரை நீர் சுத்திகரிக்கும் கருவி மூலமும் குடிநீரை சுத்திகரித்து மாணவிகளுக்கு வழங்கி வருவதாகவும் யாரோ காழ்ப் புணர்ச்சி காரணமாக பள்ளி மீது குறைகுறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.