​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது அரசுப் பேருந்து மோதி 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Published : Aug 15, 2023 7:44 PM

சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது அரசுப் பேருந்து மோதி 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Aug 15, 2023 7:44 PM

கல்பாக்கத்தில் அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.

அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் சுஜாதாவின் மகன் ஷர்வன் அங்குள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

சுதந்திர தினத்தையொட்டி பள்ளிக்கு சென்ற ஷர்வன் வீடு திரும்புவதற்காக சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து வந்த அரசுப் பேருந்து மோதி சைக்கிளில் வந்த மாணவன் கீழே விழுந்து தலையில் டயர் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.