​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர்; மு.க. ஸ்டாலின்

Published : Aug 15, 2023 3:01 PM

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர்; மு.க. ஸ்டாலின்

Aug 15, 2023 3:01 PM

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசுத் துறையில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.