​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் கருவியினை வாங்குவதற்கு நிதியுதவி பெற்றுத் தரப்படும் - முன்னாள் அமைச்சர் தங்கமணி

Published : Jul 10, 2023 9:32 AM

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் கருவியினை வாங்குவதற்கு நிதியுதவி பெற்றுத் தரப்படும் - முன்னாள் அமைச்சர் தங்கமணி

Jul 10, 2023 9:32 AM

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் கருவியினை வாங்குவதற்கு நிதியுதவி பெற்றுத் தரப்படும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குமாரபாளையத்தில் ஜவுளி உற்பத்தி ஆலைகளையும், சாய சலவை ஆலைகளையும் பிரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

மேலும் சாய சலவை ஆலைகளால் புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், அதனை முன்கூட்டியே கண்டறியும் கருவியை வாங்குவதற்கு தனியார் நிறுவன சமூக நல நிதியிலிருந்து நிதியை பெற்று தருவதற்கு உதவி புரிவதாக உறுதி அளித்தார்.