​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டு வாசலில் செருப்பை கழற்றி விடுவதில் தகராறு... 2ஆவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி

Published : Jul 09, 2023 8:03 PM

வீட்டு வாசலில் செருப்பை கழற்றி விடுவதில் தகராறு... 2ஆவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி

Jul 09, 2023 8:03 PM

சென்னை திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் எதிரெதிரே வசிப்பவர்களுக்கு இடையே, வீட்டு வாசலில் செருப்பை கழற்றி விடுவதில் ஏற்பட்ட தகராறில் 2ஆவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தியாகராயபுரம் பகுதியில் உள்ள அந்த குடியிருப்பில் வசித்து வரும் புஷ்பகாந்த் என்பவரது மனைவி வசந்தி உயிரிழந்தவர் ஆவார். இவர் கடந்த 1ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, எதிர்வீட்டிற்கு குடிபோதையில் வந்த குமார் என்பவர் செருப்பை அலட்சியமாக கழற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இது வசந்திக்கு இடையூறாக இருந்ததாகவும் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதில், குமார் தள்ளிவிட்டதில் வசந்தி மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

படுகாயமடைந்த அவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட குமார் மீது தற்போது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது.