​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகை வியாபாரியிடம் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மோசடி செய்த நகைப் பட்டறை ஊழியர் கைது...!

Published : Jul 09, 2023 4:56 PM

நகை வியாபாரியிடம் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மோசடி செய்த நகைப் பட்டறை ஊழியர் கைது...!

Jul 09, 2023 4:56 PM

கோவையில் நகை வியாபாரியிடம் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மோசடி செய்த நகைப் பட்டறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த விகேஷ் ஜெயின் கோவை சொக்கம்புதூரில் வசித்து வருகிறார்.

நகை வியாபாரியான இவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சேக் சலாம் அலி என்பவர், கோவை இடையர் வீதியில் நடத்தி வரும் பட்டறையில், சுமார் 11 கிலோ தங்கத்தைக் கொடுத்து ஆபரணமாக மாற்றித் தர கோரினார்.

ஆனால், சேக் சலாம், 541 கிராமுக்கு மட்டுமே நகையாக செய்து கொடுத்துவிட்டு, எஞ்சிய தங்கத்துடன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, பட்டறை ஊழியர் அஜயதுல்லாவை விசாரித்த போலீசார், அவரிடம் இருந்த 260 கிராம் தங்கத்தை கைப்பற்றி அவரை கைது செய்தனர். பட்டறை உரிமையாளர் சேக் சலாமை தேடி வருகின்றனர்.