​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் டிரோன் ஒன்றை பஞ்சாப் மாநிலத்தில் கண்டுபிடித்த பி.எஸ்.எப் வீரர்கள்

Published : Jul 09, 2023 6:09 AM

பாகிஸ்தான் டிரோன் ஒன்றை பஞ்சாப் மாநிலத்தில் கண்டுபிடித்த பி.எஸ்.எப் வீரர்கள்

Jul 09, 2023 6:09 AM

பஞ்சாப் மாநிலம் தான் தரன் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் ஒன்றை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இடைமறித்தல் மூலம் டிரோன் இருப்பிடத்தை அறிந்த ராணுவ வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று வயலில் விழுந்து கிடந்த டிரோனைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது மற்றொரு இடத்தில் மேலும் ஒரு டிரோன் சிக்கியதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.இந்த டிரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.