​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மனைவியை கொலை செய்து விட்டு சாமியார் வேடத்தில் சுற்றியவர் கைது...!

Published : Jul 08, 2023 2:56 PM

16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மனைவியை கொலை செய்து விட்டு சாமியார் வேடத்தில் சுற்றியவர் கைது...!

Jul 08, 2023 2:56 PM

சென்னை ஓட்டேரியில் மனைவியை கொலை செய்து விட்டு டெல்லியில் ஒன்றரை ஆண்டுகளாக சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த வாணி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

ஓட்டேரியில் வசித்து வந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வாணி மீதான சந்தேகத்தில் அவரை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்து விட்டு ரமேஷ் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

அவரை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், டெல்லியில் உள்ள ஸ்ரீஹரிஹர் உதாசீன் ஆசிரமத்தில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, தனிப்படையினர் டெல்லிக்குச் சென்று ரமேஷை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.