​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டிவனம் அருகே பூசாரி வெட்டிக் படுகொலை... மூன்று பேர் கைது

Published : Jul 08, 2023 7:47 AM

திண்டிவனம் அருகே பூசாரி வெட்டிக் படுகொலை... மூன்று பேர் கைது

Jul 08, 2023 7:47 AM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூசாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டசம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ்,இவர் பூசாரி ஆகவும் இருந்து கொண்டு மந்திரித்தும் வருகிறார்.இந்த நிலையில் வழக்கம் போல இரவு தன் கடையை மூடிவிட்டு சின்ன நெற்குணத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் வீட்டு அருகே வரும்போது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.இதையடுத்து சித்தாமூர் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.