​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல் சல்வடோர் நாட்டில் கால்பந்து மைதானத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு....!

Published : May 21, 2023 2:09 PM

எல் சல்வடோர் நாட்டில் கால்பந்து மைதானத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு....!

May 21, 2023 2:09 PM

எல் சால்வடார் நாட்டில் கால்பந்து மைதானத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் உள்ளூர் கால்பந்து அணிகள் மோதும் காலிறுதி ஆட்டம், அந்நாட்டின் மிகப்பழமை வாயந்த கஸ்கேட்லான் மைதானத்தில் நடைபெறவிருந்தது.

போட்டியைக் காண 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த நிலையில், மைதானத்திற்குள் ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்ல முயன்றதால், நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பலர் கீழே விழுந்தனர். அவர்களை பலர் நெரிசலில் மிதித்துத்துச் சென்றதால், 12 பேர் பலியாயினர்.

இதையடுத்து கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.