சென்னை அயனாவத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்த கருணா என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், யோனா என்ற இளைஞர் மீது கருணா உட்பட அவரது நண்பர்கள் ஐந்து பேர் கல்லைப் போட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்ட கருணா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு தனது அக்கா வீட்டருகே நின்று கொண்டிருந்த கர்ணாவை சுற்றி வளைத்து தலையில் கல்லைப் போட்டு மர்மகும்பல் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.