​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கியில் வாடிக்கையாளர் நகையை திருடி மோசடி செய்த இருவர் கைது..!

Published : May 21, 2023 7:14 AM

வங்கியில் வாடிக்கையாளர் நகையை திருடி மோசடி செய்த இருவர் கைது..!

May 21, 2023 7:14 AM

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 90 சவரன் நகைகளை திருடிய வழக்கில் வங்கியின் பொறுப்பு அதிகாரிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும்  கைது செய்து, 40 லட்சம் ரூபாய்  நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதலியார்பேட்டை கொம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விவசாய கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த போது, வங்கியின் பொறுப்பு அதிகாரி கதிரவன் நகைகளை தராமல் அலகழித்து வருவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான விசாரணையில் கதிரவன் நகைகளை லாக்கரில் இருந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து  கதிரவன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேஷ்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.