​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெய்ப்பூரில் அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் கட்டுக் கட்டாக ரூ.2.31 கோடி ரொக்கமும், 1கிலோ தங்கக் கட்டிகளும் கண்டெடுப்பு..!

Published : May 21, 2023 6:36 AM

ஜெய்ப்பூரில் அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் கட்டுக் கட்டாக ரூ.2.31 கோடி ரொக்கமும், 1கிலோ தங்கக் கட்டிகளும் கண்டெடுப்பு..!

May 21, 2023 6:36 AM

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள யோஜனா பவன் கட்டடத்தின் அடித்தளத்தில் கோடிக் கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அரசு ஊழியர்கள் எட்டு பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரசு அலுவலகமான 'யோஜனாபவன்' பேஸ்மென்ட்டில், பூட்டியிருந்த ஒரு அறைக்குள் இருந்து கட்டுக் கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஒரு கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் கண்டெடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 8 அரசு ஊழியர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.