​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்களை அரசு பேருந்திலிருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை...!

Published : May 20, 2023 7:59 PM

தங்களை அரசு பேருந்திலிருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை...!

May 20, 2023 7:59 PM

திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரைக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறிய தங்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிங்கத்தாகுறிச்சி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான பொன்னுத்தாயும், அவரது சகோதரரான நாகராஜுவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தரிசனம் செய்துள்ளனர்.

பின்னர் தூத்துக்குடி செல்வதற்காக நாழிக்கிணறு பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தனர்.

அப்போது வந்த அரசு பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்டுள்ளனர்.

மேலும் குறைகளை சுட்டிக்காட்டி கடுமையான வார்த்தைகளால் அவதூறு பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.