​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்போன் டவருக்கு மின் இணைப்பு கொடுக்க வந்த இளைஞர்களை பேட்டரி திருடர்கள் என நினைத்து தாக்கிய போலீசார்...!

Published : May 20, 2023 3:15 PM



செல்போன் டவருக்கு மின் இணைப்பு கொடுக்க வந்த இளைஞர்களை பேட்டரி திருடர்கள் என நினைத்து தாக்கிய போலீசார்...!

May 20, 2023 3:15 PM

நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் செல்போன் டவருக்கு மின் இணைப்பு கொடுக்க வந்த இளைஞர்களை பேட்டரி திருடர்கள் என நினைத்து போலீசார் தாக்கினர்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுகோம்பையை சேர்ந்த ரஞ்சித்குமார், பெருமாள் பவர் ஜெனரேட்டர் வாகனத்திலிருந்து செல்போன் டவருக்கு மின் இணைப்புக் கொடுத்துவிட்டு, இரவு நேரமானதால் அங்கேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

டவரில் அடிக்கடி பேட்டரி திருட்டு தொடர்ந்த நிலையில் அப்போது, ரோந்துப்பணியில் இருந்த ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரித்த போது, ரஞ்சித்குமாரும், பெருமாளும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிம்பிய நிலையில், திருடர்கள் என நினைத்து தவறுதலாக அவர்களை அடித்ததாக போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.