​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
''பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம்'' - சென்னை மாநகராட்சி ஆணையர்

Published : May 20, 2023 12:26 PM

''பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம்'' - சென்னை மாநகராட்சி ஆணையர்

May 20, 2023 12:26 PM

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே அதிகம் நடமாடுவதை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், சாலையோரக் கடைகளில் நிழற்குடைகள் அமைக்கப்படுவதை மாநகராட்சி உறுதி செய்து வருவதாக கூறினார். 

மாநகராட்சிப்பகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசலின் இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.