​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நைஜீரியாவில் கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல்... 85 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல்

Published : May 19, 2023 6:04 AM

நைஜீரியாவில் கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல்... 85 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல்

May 19, 2023 6:04 AM

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் மத்தியப் பகுதியில் விவசாய நிலத்தில் கால்நடை மேய்ந்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் குடியிருப்புப் பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மேலும் இரு தரப்பினரும் ஆயுதங்கள் மூலம் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் உயிரழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக மங்கு மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வீடுகளை இழந்து சாலைகளில் சுற்றித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.