​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

Published : May 18, 2023 5:51 PM

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

May 18, 2023 5:51 PM

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையின் ஒரு அறையில் 4 பேர் பட்டாசுக்கான ரசாயன கலவையை உள்ளீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக அழுத்தம் காரணமாக ரசாயன கலவை வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

அந்த அறை தரைமட்டமான நிலையில் அருகில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு 4 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.