​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷச்சாராயம் அருந்திய 15 பேருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல்....

Published : May 18, 2023 3:24 PM

விஷச்சாராயம் அருந்திய 15 பேருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல்....

May 18, 2023 3:24 PM

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு கண்பார்வை, சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு, டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டபோதிலும், உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்கக் கூடுமோ என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் உறைந்து போயுள்ளனர்.