​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்துக்காக பெற்ற தாய்,தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது..!

Published : May 17, 2023 9:50 PM

சொத்துக்காக பெற்ற தாய்,தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது..!

May 17, 2023 9:50 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சொத்தை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாய், தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டான்.

அரசடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி - புஷ்பாவதி தம்பதிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.  இவர்களது மூத்த மகன் தணிகைவேல் போலி பத்திரம் தயார் செய்து சொத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி, வங்கியில் கடனும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அந்த பத்திரத்தை ரத்து செய்யக் கோரி ரத்தினசாமி - புஷ்பாவதி தம்பதி மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தணிகைவேல், மனைவி சௌண்யாவுடன் சேர்ந்து கொண்டு சொத்தை பிரித்துக் கேட்டு தகராறு செய்துள்ளான். அதற்கு பெற்றோர் மறுக்கவே, அரிவாளால் தலையிலும் காலிலும் கொடூரமாக வெட்டியுள்ளான்.

படுகாயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தணிகைவேலை கைது செய்த போலீசார், சௌண்யாவைத் தேடி வருகின்றனர்.