​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீசை கண்டதும் நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிய இம்ரான் கான் கட்சியின் முக்கியத் தலைவர்

Published : May 16, 2023 8:47 PM

போலீசை கண்டதும் நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிய இம்ரான் கான் கட்சியின் முக்கியத் தலைவர்

May 16, 2023 8:47 PM

இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடமிருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடினார்.

கடந்த வாரம், ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைதான போது, மக்களை வன்முறைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் இம்ரான் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ஃபவத் செளதிரிக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஃபவத் செளதிரியை வேறொரு வழக்கில் கைது செய்ய போலீசார் வந்தபோது, காரிலிருந்து இறங்கி மூச்சு இரைத்தப்படி நீதிமன்றத்தை நோக்கி ஜாமீன் வாங்க ஓடினார் ஃபவத் செளதிரி.