​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாரி மீது பேருந்து மோதி விபத்து - 40-க்கும் மேற்பட்டோர் காயம்

Published : May 16, 2023 6:09 PM



லாரி மீது பேருந்து மோதி விபத்து - 40-க்கும் மேற்பட்டோர் காயம்

May 16, 2023 6:09 PM

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 40 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ஜிப்சம் ஏற்றிச் சென்ற லாரியை முந்த முயன்று பின்பகுதியில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.

பேருந்தின் இருக்கைகள் நசுங்கியதில் கம்பிகளுக்கு நடுவே சிக்கித் தவித்தவர்களை பொதுமக்கள் மீட்டனர். பலத்த காயமடைந்த சுமார் 15 பேர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து அதிக வேகத்தில் சென்றதே விபத்திற்கு காரணமென போலீஸார் தெரிவித்தனர்.