​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெக்சிகோவில் 18 வயது இளைஞன் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி.!

Published : May 16, 2023 10:34 AM

மெக்சிகோவில் 18 வயது இளைஞன் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி.!

May 16, 2023 10:34 AM

மெக்சிகோவில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 3 பேரை கொன்ற 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்த அந்த இளைஞன், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீதும் அவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் 2 காவலர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

சரணடையுமாறு பல முறை கூறியும் கட்டுக்குள் வராத அந்த இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் யார் என்றும் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.