​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆத்தூர் அருகே ஜோடியாக சுற்றித் திரியும் 2 காட்டு யானைகள்... மக்கள் அச்சம்

Published : May 15, 2023 7:17 AM

ஆத்தூர் அருகே ஜோடியாக சுற்றித் திரியும் 2 காட்டு யானைகள்... மக்கள் அச்சம்

May 15, 2023 7:17 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜோடியாக சுற்றி திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர எல்லையில் இருந்து வழி மாறி வந்த  2 யானைகள் ஆத்தூர் குப்பம் பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது. அந்த 2 யானைகளும்  வெயில் தாக்கம் காரணமாக வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி, சேலம்   உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வனத் துறையினர் அவைகளை காட்டுக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.