​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓடும் ரயிலில் 15 பேர் கொண்ட கும்பல் காவலர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் கைது..!

Published : May 14, 2023 6:51 AM



ஓடும் ரயிலில் 15 பேர் கொண்ட கும்பல் காவலர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் கைது..!

May 14, 2023 6:51 AM

சேலத்தில் ஓடும் ரயிலில் காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் தாளநத்தம் பகுதியைச் சேர்ந்த காவலர் ராஜவேலு, நேற்று ஜோலார்பேட்டைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது இருக்கையில் அமர்வது தொடர்பாக பொம்மிடியைச் சேர்ந்த வெங்கட் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெங்கட் கொடுத்த தகவலையடுத்து பொம்மிடி ரயில் நிலையம் வந்த 15 பேர் கொண்ட கும்பல் ராஜவேலுவை கீழே இறக்கி சரமாரியாகத் தாக்கினர்.

தாக்குதலில் காவலர் ராஜவேலுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பாப்பிரெட்டிபட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வெங்கட், சக்தி சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பொ.மல்லாபுரம் திமுக பேரூராட்சி தலைவியின் மகனும், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலருமான உதயகுமார் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.