​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி20 மாநாட்டை சீர்குலைக்க எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு..!

Published : May 13, 2023 7:16 PM

ஜி20 மாநாட்டை சீர்குலைக்க எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு..!

May 13, 2023 7:16 PM

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது.

ஜி20 மாநாட்டை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் இந்த ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் குழு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்க முயன்றபோது, இந்திய துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தி ஊடுருவலை தடுத்ததாகவும், இதில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.