​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடை விடுமுறையில் விளையாட சென்ற 3 சிறார்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. விளாத்திகுளத்தில் சோகம்..!

Published : May 13, 2023 7:45 AM

கோடை விடுமுறையில் விளையாட சென்ற 3 சிறார்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. விளாத்திகுளத்தில் சோகம்..!

May 13, 2023 7:45 AM

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோடை விடுமுறையில் விளையாட சென்ற 3 சிறார்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிவலார்பட்டி கிராமத்தைச்சேர்ந்த முருகன் என்பவரது மகன்களான மகேஷ், அருண் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகன் சுதன் ஆகியோர் அங்குள்ள கண்மாய் அருகே விளையாடியுள்ளனர்.

வெகுநேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது, கண்மாயில் சென்று பார்த்தபோது சிறுவன் அருண் உடல் மிதந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மற்ற இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட 3 சிறுவர்களின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டது