​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏர் இந்தியா விமானத்தில் பறக்க பஞ்சாப் இளைஞருக்கு 2 ஆண்டுகள் தடை.. பெண் பணியாளர்களைத் தாக்கியதால் நடவடிக்கை..!

Published : May 13, 2023 6:38 AM

ஏர் இந்தியா விமானத்தில் பறக்க பஞ்சாப் இளைஞருக்கு 2 ஆண்டுகள் தடை.. பெண் பணியாளர்களைத் தாக்கியதால் நடவடிக்கை..!

May 13, 2023 6:38 AM

டெல்லி - லண்டன் விமானத்தில் பெண் பணியாளர்களைத் தாக்கிய இளைஞர் 2 ஆண்டுகள் பறக்க ஏர் இந்தியா நிறுவனம் தடை விதித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்கிரத் சிங் பத்தா என்ற பயணி கடந்த மாதம் 10ம் தேதி விமானத்தில் சென்ற போது பெண் பணியாளர்களைத் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா அமைத்த குழு விசாரணை நடத்தியது. அதில் குறிப்பிட்ட இளைஞரின் செயல் விமானத்திற்கு சேதம், கொலை முயற்சி தாக்குதல் மற்றும் உயிருக்கு ஆபத்தான நடத்தை என்ற 3 வகை குற்றமாக வகைப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான ஜஸ்கிரத் சிங் பத்தா ஏர் இந்தியா விமானங்களில் பறப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.