​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பனிப்பொழிவால் மாமரப் பூக்கள் உதிர்வை தவிர்க்க பெண் விவசாயி ஐடியா

Published : Mar 05, 2023 2:17 PM

பனிப்பொழிவால் மாமரப் பூக்கள் உதிர்வை தவிர்க்க பெண் விவசாயி ஐடியா

Mar 05, 2023 2:17 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பனிப்பொழிவால் மாமரப் பூக்கள் உதிர்வை தவிர்க்க இயற்கை உரம் தெளித்து பெண் விவசாயி ஒருவர் வெற்றி கண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவால் மாமரப் பூக்கள் உதிர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஓசூர், கௌதாலம் கிராமத்தில் பெண் விவசாயி எழிலரசி நகராஜ் என்பவர் வெர்மி கம்போஸ்ட் எனும் இயற்கை உரத்தை மரத்தில் தெளித்து பூக்களுக்கு புத்துயிர் அளித்துள்ளார்.

மேலும், 8 ஏக்கரில் மலர் விவசாயம் செய்து வரும் அவர் வெர்மி கம்போஸ்ட்டால் பனிப்பொழிவு தாக்கத்தில் இருந்து பூக்களை காக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.