​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு.. தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது..!

Published : Mar 05, 2023 7:00 AM

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு.. தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது..!

Mar 05, 2023 7:00 AM

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே முன்விரோதம் காரணமாக 10க்கும் மேற்பட்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே 5பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ஆறுமுகநேரி பாஸ்கர் என்பவர் கூட்டாம்புளி கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் பாஸ்கரை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது தப்பி ஓடிய அவர் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவுக் கட்டு போடப்பட்டது.