​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இதே பாதையில் பயணித்தால் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த தேசமாக இந்தியா மாறும் - பிரதமர்

Published : Mar 04, 2023 5:47 PM

இதே பாதையில் பயணித்தால் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த தேசமாக இந்தியா மாறும் - பிரதமர்

Mar 04, 2023 5:47 PM

உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையும்போது, அது தானாகவே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையதள உரையில் பிரதமர் மோடி இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளது என்று கூறிய பிரதமர், சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்றார்.

இதே பாதையில் பயணித்தால் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த தேசமாக இந்தியா மாறும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட், நாட்டின் உள்கட்டமைப்பு துறைக்கு புதிய சக்தியை கொடுத்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, மாநில அரசுகள் உள்கட்டமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.