​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணை குண்டு வீசப்பட்ட விவகாரம்: குண்டை வீசிவிட்டு தீக்காயங்களுடன் மருத்துவமனை சென்ற இளைஞர் கைது!

Published : Mar 04, 2023 4:54 PM

டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணை குண்டு வீசப்பட்ட விவகாரம்: குண்டை வீசிவிட்டு தீக்காயங்களுடன் மருத்துவமனை சென்ற இளைஞர் கைது!

Mar 04, 2023 4:54 PM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்ரது தந்தை நாள்தோறும் குடிபோதையில் வந்து தாயை துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் அவர் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. பள்ளத்தூர் அரசு மதுபானக் கடையில் நேற்று இரண்டாவது முறையாக மண்ணெண்ணை குண்டு வீசப்பட்டதில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.

கல்லாவில் வைத்திருந்த பணமும் எரிந்து நாசமானது. மர்ம நபரை போலீசார் தேடி வந்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் இளைஞர் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

விசாரணையில் ராஜேஷ் பாண்டியன் என்ற அந்த இளைஞர்தான் குண்டு வீசியவர் என்பதை கண்டுபிடித்தனர். தனது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை துன்புறுத்தி வந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் அவ்வாறு செய்துவிட்டான் என்றும் அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும் ராஜேஷ் பாண்டியனின் தாய் கூறினார்.