​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை - டிஜிபி

Published : Mar 04, 2023 3:48 PM

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை - டிஜிபி

Mar 04, 2023 3:48 PM

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொய் செய்தி பரப்பியோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படவில்லை என அவர்களுக்கு புரியும் மொழியில் காவல்துறையினர் விளக்கமளித்து வருவதாகவும், வட மாநிலத்தவர்களுக்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி தெரிவித்தார்.