​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாகன தணிக்கை செய்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கி அடாவடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது!

Published : Mar 04, 2023 3:28 PM

வாகன தணிக்கை செய்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கி அடாவடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது!

Mar 04, 2023 3:28 PM

சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை விவகாரத்தில் பெங்களூரை சேர்ந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கொள்ளை தொடர்பாக  10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில்,அண்டை மாநில போலீசாரின் உதவியும் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில்  பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஸ்ரீபன், கங்காதர் என இரண்டு பேரை பிடித்து  விசாரித்ததில், அவர்களுக்கு  பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு இந்த கொள்ளையில் 6 பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதாகவும்,  பெங்களூரு சிறையில் உள்ள மேலும் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.