​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்ணை மர்மமான முறையில் கொலை செய்த வழக்கில் அவரது ஆண் நண்பரான போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிக்கினார்..!

Published : Mar 04, 2023 12:08 PM

பெண்ணை மர்மமான முறையில் கொலை செய்த வழக்கில் அவரது ஆண் நண்பரான போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிக்கினார்..!

Mar 04, 2023 12:08 PM

பெண்ணை நிர்வாணப்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் அவரது ஆண் நண்பரான போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிக்கினார்.

தேனி, கம்பம் பகுதியில் அமுதா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது ஆண் நண்பரான ஜெயக்குமாரை பிடித்து சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர் கம்பம் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் என்பதும், ஏற்கனவே அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், 10 ஆண்டுகளாக அமுதாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்தார் என்பதும் தெரியவந்தது.

ஏற்கனவே அமுதாவிடம் தகராறில் ஈடுட்டதாக ஜெயக்குமாரை கம்பம் போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் ‘மீண்டும் தங்களுக்குள் தகராறு ஏற்பட்டது’ எனவும், ‘இதனால் ஆத்திரமடைந்து அமுதாவை கொலை செய்தேன்.’ எனவும் ஜெயக்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.