​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊதாரி கணவனை திருத்த மனைவி, மகன் நடத்தி கொள்ளை நாடகம்..!

Published : Mar 04, 2023 10:34 AM

ஊதாரி கணவனை திருத்த மனைவி, மகன் நடத்தி கொள்ளை நாடகம்..!

Mar 04, 2023 10:34 AM

கடலூரில் கணவனைத் திருத்த மனைவி மற்றும் மகன் ஆகியோர் உறவினர் வீடுகளில் நகை மற்றும் பணத்தை பதுக்கி வைத்து கொள்ளை போனதாக நாடகம் ஆடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய் மற்றும் 100சவரன் நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் வீட்டில் சோதனை போட்ட போலீசார் அங்கு வயாகரா மாத்திரை இருப்பதைக் கண்டு மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாலகிருஷ்ணனுக்கு பெண்கள் சகவாசம் அதிகம் இருந்ததாகவும், அவர்களுக்கு பணத்தை செலவழித்ததால் மனைவியும், மகனும் லாப பணம் , நகைகளை உறவினர்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.